வியாழன், 21 மே, 2015

கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் இலவசப் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, கருங்குளம், சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களில் உண்டு உறைவிட பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும், ஒரு முறை பயணப்படியும், நாள்தோறும் பஞ்சப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதமும் வழங்கப்படும். பயிற்சியில் ஆளுமைத்திறன், அடிப்படை கணினி, அடிப்படை ஆங்கிலம் உள்ளிட்டவைகளும் கற்றுத்தரப்படும். பயிற்சி நிறைவுற்றதும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
கட்டுமானப் பணிகள், எலக்ட்ரீஷியன், நீரிழிவு நோய் வல்லுநர், மருந்தக உதவியாளர், அடிப்படை அவசர மருந்தாளுநர், மருந்தாளுநர் உதவியாளர், மெடிக்கல் லேப் உதவியாளர், கேட்டரிங், சில்லறை வர்த்தகம், கணக்கு பராமரிப்பாளர், தையல், கணினி பிரிவில் மல்டிமீடியா, ஆட்டோ காட் ஆகியவை 3 மாத பயிற்சிகளாகும்.
6 மாத பயிற்சிகளாக மோட்டார் மெக்கானிக், டீசல், ஆட்டோ எலக்ட்ரீஷியன், வெல்டர், டிங்கரிங் மற்றும் பெயிண்டிங், பேஷன் டிசைனிங், ஆய்வக உதவியாளர், கணினி மென்பொருள் தொகுப்பு, பல் மருத்துவ உதவியாளர் பயிற்சிகள் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சில்லறை வர்த்தகம், பி.பி.ஓ., வரவேற்பாளர் உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்படும்.  இதற்கான வயது வரம்பு 16 முதல் 35 வரையாகும். பெண்களுக்கு 40 வயது. கல்வித்தகுதி, பயிலும்  இடம்  உள்ளிட்ட விவரங்களை மாவட்ட  ஆட்சியராக  இணையதளத்தில் பார்வையிடலாம்.
பயிற்சியில் சேர விரும்புவோர் 22 ஆம் தேதிக்குள் தங்கள் பெயர்களை நேரிலோ அல்லது 0461-2341282 என்ற தொலைபேசி எண்ணிலோ பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம், தூத்துக்குடி என்ற முகவரியை அணுக வேண்டும் என்றார் அவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...