ஞாயிறு, 25 மார்ச், 2018

ஏரல் அருகே சாயர்புரம் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.


சாயர்புரம் அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
சாயர்புரம் அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.
சாயர்புரம், 

சாயர்புரம் அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார்.

கல்லூரி மாணவர் 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயலை சேர்ந்தவர் சாமத்துரை. இவருடைய மகன் ஈசுவரமூர்த்தி (வயது 20). இவர் வாகைகுளம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று கல்லூரி நண்பர்களுடன் ஈசுவரமூர்த்தி சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள்புரத்துக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்ததாக கூறப்படுகிறது.

தண்ணீரில் மூழ்கி... 

அப்போது எதிர்பாராத விதமாக ஈசுவரமூர்த்தி ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது, அவர் திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள், அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. மேலும் அந்த பகுதி ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய ஈசுவரமூர்த்தியை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...