ஞாயிறு, 25 மார்ச், 2018

ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்



ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்: தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

ஆள்சேர்ப்பு 

இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 10–ந் தேதி முதல் 23–ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்காக இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்பும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் ஆவணங்களுடன் இன்றுக்குள் (ஞாயிற்றுக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

அனுமதி சீட்டு

அதன் பின்னர் வருகிற 29–ந் தேதிக்கு பின்னர் அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்து, அனுமதி சீட்டுடன் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு நேரடியாக சென்று ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...