ஏரல், நவ.5&
ஏரலில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நகைக்கடைகளில் ரகசிய கேமிரா பொருத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நகைக்கடை உரிமையாளர்கள், நகை அடகுகாரர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் ஏரல் ஜேஜே திருமண மண்டபத்தில் நடந்தது. திருவைகுண்டம் டிஎஸ்பி மணி தலைமை தாங்கினார். ஏரல் இன்ஸ்பெக்டர் ராம ராஜன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜூ முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நகைகடைகளுக்கு இரவு காவலர்களை அந்தந்த கடைக்காரர்கள் கூடுதலாக நியமிக்கவேண் டும்நகை கடைகளில் ரகசிய கேமிரா பொருத்தவேண் டும். எச்சரிக்கை அலாரம் வைக்கவேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் வீரராஜ், ஏட்டு முத்தையா, ஏரல் நகைக்கடை வியாபாரிகள் சங்க தலைவரும் பேரூ ராட்சி தலைவருமான பாலகிருஷ்ணன், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் மந்திரம் மற்றும் ஏரல், திருவைகுண்டம், செய்துங்கநல்லூர், குரும்பூர் உள்ளிட்ட பல் வேறு இடங்களிலிருந்து நகைக்கடை உரிமையாளர்கள், அடகு கடைக்காரர்கள் கலந்து கொண்ட னர்.
நகைக்கடைகளில் ரகசிய
கேமிரா: போலீசார் அறிவுரை
ஏரலில் கலந்தாய்வு கூட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக