சனி, 5 நவம்பர், 2011

பதவியை இழந்தார் சண்முகநாதன்



இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி.சண்முக நாதன் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 2வது முறை யாக பாதியிலேயே வெளியேறியுள்ளார். ஸ்ரீவை குண்டத்துக்கு கிடைத்த விஐபி அந்தஸ்து பாதியி லேயே பறிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.பி.சண்முக நாதன். தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாள ராகவும் பதவி வகித்ததால் இவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் ‘பவர்புல் லாக‘ திகழ்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் திமுக வில் இணைந்ததால் கட்சியை பலப்படுத்த சீனியரான சண்முகநாதனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் பதவியேற்ற 6 மாதத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.கடந்த 2001ம் ஆண்டி லும் இதே ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட¢டவர் எஸ்.பி.சண்முகநாதன். அப்போதும் இவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அப்போதும் 9 மாதத்தில் சண்முகநாதன் பதவியை இழந் தார். அதன் பின்னர் எம்எல்ஏவாகவே தொடர்ந்தார்.இந்நிலை யில் 2வது முறையாக பதவியேற்ற சண்முகநாதன் அமைச்சரவையில் 6 மாதம் மட்டுமே நீடித்துள்ளார். இதனால் ஸ்ரீவைகுண்டம் தொகு திக்கு கிடைத்த விஐபி அந்தஸ்து மீண்டும் பறி போயுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2 அமைச்சர்கள் கிடைத்த நிலையில் சண்முகநாதனின் பதவி பறிக்கப்பட்ட போதும் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...