திங்கள், 7 நவம்பர், 2011

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பதவி பறிப்பு


தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர்
எஸ்.பி.சண்முகநாதன்
பதவி பறிப்பு
சென்னை, நவ. 7&
அமைச்சர் பதவி பறிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் எஸ்.பி.சண்முகநாதன் நீக்கப்பட்டுள் ளார். பதவி பறிப்புக்கு பின்னணி என்ன என்பது குறித்து பரபரப்பு தகவல் கள் வெளியாகி உள்ளன. புதிய மாவட்ட செயலாளராக அமைச்சர் செல்லப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். சரவண பெருமாளுக்கு புதிய பதவி தரப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன். ஸ்ரீவைகுண்டம் தொகுதி யில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எஸ்.பி. சண்முகநாதன் அமைச்சர் பதவி யில் இருந்து நீக்கப்பட் டார்.
அமைச்சர் பதவி காலி யான ஒரு சில நாட்களில் அவர் வகித்து வந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக தொழிலா ளர் நலத் துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி.சண்முகநாதனுக்கு தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலா ளர் பதவி அள¤க்கப்பட்டுள்ளது. அந்த பொறுப் பில் இருந்த தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ உதயகுமாரிடம் இருந்து அதிமுக மாநில மாணவரணி செய லாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. புதிய மாணவரணி செயலாள ராக சரவணப்பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கட்சியின் பொதுச் செய லாளரும், முதல்வருமான ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
எஸ்.பி.சண்முகநாதனின் அமைச்சர், கட்சி பதவிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பத வியில் இருந்த எஸ்.பி.சண்முகநாதன் அப்போது நடந்த சட்டசபை தேர்த லில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதும் அவருக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில மாதங்
5ம் பக்கம் பார்க்க
அமைச்சர் பதவியை தொடர்ந்து கட்சி பதவியும் போனது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...