வெள்ளி, 30 மார்ச், 2012

ஏரல் அருகே அரசு பள்ளி சூறை

ஏரல்: ஏரல் அருகே அரசு பள்ளி சூறை யாடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார் கள்.
ஏரல் அருகே  உமரிக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் வெளிப்பகுதி யில் மாணவர்கள் உட்கார்ந்து படிக்கவும், சாப்பிடவும் சிமென்டால் ஆன பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மர்ம கும்பல் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட சிமென்ட் பெஞ்சுகளை உடைத்தன. இதன் சேதமதிப்பு ரூ.10 ஆயிரமாகும். 
கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் பள்ளி விடுமுறை என்பதால் உடனடியாக இது தெரியவில்லை. திங்கட்கிழமை பள்ளி திறந்த பிறகே கும்பலின் வெறியாட்டம் தெரியவந்தது. 
இதுகுறித்து ஏரல் போலீசில் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் மைக்கேல் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமராஜன் விசா ரணை நடத்தி வருகிறார். பள்ளியை மர்ம கும்பல் சூறையாடிய சம்பவம் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...