வியாழன், 23 ஜனவரி, 2014

சிறுத்தொண்டநல்லூர் & பெருங்குளம் இணைப்பு சாலையில் முட்செடிகள் அகற்றும் பணி துவக்கம்

ஏரல், ஜன. 24:
ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் & பெருங்குளம் இணைப்பு சாலையில் ஆக்கிரமித்துள்ள முட்செடிகள் தினகரன் செய்தியால் ஜேசிபி மூலம் அகற்றும் பணி துவங்கியுள்ளது.
ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூரில் இருந்து பெருங்குளம் செல்லும் இணைப்பு சாலையில் அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. மேலும் சின்னநட்டாத்தி, நட்டாத்தி, மணலூர் பகுதிகளில் இருந்து ஏரல் மற்றும் சிறுத்தொண்டநல்லூர் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் இதனால் அவதிப்பட்டு வந்தனர்.
இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்களின் சட்டையை முட்செடிகள் கிழிப்பதோடு, கண்களையும் குத்தி காயப்படுத்தி வந்தது. மேலும் விவசாயிகளும் தங்களது விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். எனவே பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவி கள் நலன் கருதி சிறுத்தொண்டநல்லூரில் இருந்து பெருங்குளம் செல்லும் இந்த இணைப்பு சாலையில் வளர்ந்துள்ள முட்செடி களை அப்புறப்படுத்தி, படுகுழியாக உள்ள ரோட் டை யும் சீரமைத் திட நடவடிக்கை எடுக்க வேண் டும் என தினகரனில் செய்தி வெளியானது.
இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து ஜேசிபி மூலம் முட்செடி களை அகற்றும் பணி துவங்கி நடைபெற்று வரு கிறது.
இதனால் வியாபாரி கள், கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பழுதடைந்து படுகுழி யாக உள்ள இந்த ரோட்டையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தொண்டநல்லூரில் இருந்து பெருங்குளம் செல்லும் இணைப்பு சாலையில் அடர்ந்து வளர்ந்துள்ள முட்செடிகள் தினகரன் செய்தியால் ஜேசிபி மூலம் அகற்றும் பணி துவங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...