ஏரலில் குடியரசு தின விழா
ஏரலில் காங்கிரஸ் சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர் அலி காந்திசிலைக்கு மாலை அணிவித்தார்.
ஏரல், ஜன. 27:
ஏரல் நகர காங்கிரஸ் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்து காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் கந்தசாமி, காங்கிரஸ் பிரமுகர்கள் அய்யம் பெருமாள், அந்தோணி காந்தி, வீரசுப்பிரமணியன், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக