ஏரல் பகுதிகளில் 65வது குடியரசு தின விழா நடந்தது.
ஏரலில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் பிரபா, கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், பேபி மகேஷ் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏரல் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடந்த விழாவிற்கு நகர காங். தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்து கொடியேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை சண்முகப்பிரியா தமிழ்செல்வி இனிப்பு வழங்கினார்.
ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் தசரதபாண்டியன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் நவாஸ் கான், ஊராட்சி எழுத்தர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகளை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் கணபதிராஜா தலைமை வகித்து கொடியேற்றினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கவுன்சிலர் ராமர்பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர். வாழவல்லான் பஞ்சாயத்து அலுவகம் முன்பு பஞ்சாயத்து தலைவர் துளசி ஜெயபிரகாஷ் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சத்தீஷ், பஞ்சாயத்து உதவியாளர் கருவேலப்பாண்டி, கவுன்சிலர் பெரியசாமி, அருணாச்சலம், தொழிலதிபர் பச்சகுட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உமரிக்காடு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் செல்வி அருள் தலைமை வகித்து கொடியேற்றினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தாமோதரன், கவுன்சிலர்கள் மாரியம் மாள், சங்கர், பஞ்சாயத்து எழுத்தர் வாசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக