ஞாயிறு, 26 ஜனவரி, 2014

ஏரல்&சிறுத்தொண்டநல்லூர் சாலையில் குறுகிய பாலத்தால் விபத்து அபாயம்

ஏரலில் இருந்து சிறுதொண்டநல்லூர் செல்லும் மெயின் சாலையில் உள்ள 2 குறுகிய பாலத்தினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் வழியாக சாயர்புரம், சிவத்தையாபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடிக்கு அதிக அளவு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் பள்ளி மற்றும் சாயர்புரம் பள்ளி, கல்லூரிகளில் படிக் கும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் இந்த சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர்.
சிறுத்தொண்டநல்லூர், மணலூர், நட்டாத்தி, பெருங்குளம், சூழைவாயக்கால், மொட்டத்தான்விளை, சக்கம்மாள்புரம், கொத்தலரிவிளை, சாயர்புரம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வியா பாரம், தொழில் சம்பந்த மாக ஏரல் வந்து செல்வதற்கு இந்த சாலையைதான் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.
ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் செல்லும் சாலையில் 2 குறுகிய மிக பழமையான பாலம் உள் ளது. இந்த பாலத்தில் ஒரு பஸ் செல்லும் போது பைக்கில் வருபவர்கள் கூட ஒதுங்க முடியாத அளவுக்கு மிக குறுகிய பாலமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்த பழைய பாலத்தில் கனரக வாகனங்கள் சென்றதால் இதில் ஒரு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இன்றுவரை அந்த பாலம் கட்டப்படவில்லை.
மேலும் ஏரல் வாய்க்கால் பாலத்தில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் வாயக் கால் பாலம் வரை இந்த ரோடு பள்ளத்தில் இருப்ப தால் மழைக்காலத்தில் தண்ணீர் ரோட்டில் தேங்கிவிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரல்& சிறுத்தொண்டநல்லூர் மெயின்ரோட்டில் உள்ள பழமையான இந்த குறுகிய 2 பாலத்தினையும் புதிதாக கட்டி, பள்ளத்தில் உள்ள ரோடு மட்டத்தையும் உயர்த்தி, அகலப்படுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் செல்லும் மெயின் சாலையில் உள்ள குறுகிய பாலத்தினால் விபத்து அபாயம் நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...