வெள்ளி, 19 ஏப்ரல், 2019

ஏரல் சிவன் கோயில் சித்திரை திருவிழாவில் கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதிஉலா

ஏரல், ஏப். 19: ஏரல் மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்க சுவாமி கோயில் சித்திரை திருவிழா கடந்த 8ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் திருவிழா நடந்தது. திருவிழா காலங்களில் தினசரி காலை யாகவேள்வி பூஜை, சிறப்பு அபிசேகம், உற்சவ மூர்த்தி அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு நிகழ்ச்சியாக பக்தி இசை, வழக்காடு மன்றம், பரதநாட்டியம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாள் விழா 17ம்தேதி நடந்தது. அன்று அதிகாலையில் மகாகணபதி ஹோமம், வருஷாபிஷேகம், தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து மீனாட்சி அம்பாள்-சொக்கலிங்க சுவாமி திருக்கல்யாணம வைபவம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பிரதோஷம் பூஜையும், தொடர்ந்து மீனாட்சி அம்பாள்-சொக்கலிங்க சுவாமி திருக்கல்யாண கோலத்தில் கற்பக பொன் சப்பரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...