வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

தூத்துக்குடி, : தூத்துக்குடி,  நெல்லை மாவட்டங்களில் கோழிப்பண்ணை அமைக்க அரசு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. 
கோழிப்பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு கோழி வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க விருப்பமுள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில்  கொட்டகைகள் அமைப்பதற்கான செலவில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மேலும் நபார்டு வங்கியின்  கோழி துணிகர முதலீட்டு நிதியில் இருந்தும் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
வருடம் முழுவதும் நாட்டுக் கோழி வளர்க்க  விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக 2ம் தொகுப்பு கோழி குஞ்சுகள் வாங்கும் செலவில் 50 சதவீதமும் 3ம் தொகுப்பு கோழிக்குஞ்சுகள் வாங்கும் செலவில் 30 சதவீதமும் மானியம் வழங்கப்படும். மானியத்துடன் கறிக்கோழி, முட்டை கோழி பண்ணைகள் அமைக்க நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
விவசாயிகள் தனிநபர் தொழில் முனைவோர், சுயஉதவிக்குழுக்கள் தொழில் தொடங்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருக்க வேண்டும். கோழிப்பண்ணையை விரிவாக்கம் செய்ய ஆர்வம் உள்ளவர்களும் பயன்பெறலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளரின் கடிதம் மற்றும் கலெக்டரால் தேர்வு செய்யப்பட்ட வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என்று அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...