வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

தோழிகளுடன் பேசுவதை தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை

ஏரல், : ஏரல் தொண்டைமான் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்துகிருஷ்ணன். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மூத்த மகள் சந்தோஷினி(13) அதே ஊரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தினமும் பள்ளி முடிந் ததும் தனது தோழிகளுடன் பேசி விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதை தாய் கனகலட்சுமி கண்டித்தார். மேலும் மகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர். இதில் மனமுடைந்த சந்தோஷினி கடந்த 7ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.  
இதுகுறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் ராமராஜன், எஸ்ஐ முத்துலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பண்டாரம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...