வெள்ளி, 2 நவம்பர், 2012

தூத்துக்குடியில் விமான நிலைய

விமான நிலையத்திற்கு செல்வதற்கான இணைப்பு சாலைவசதி சரிவர இல்லை. விமான நிலைய வளாகத்தில் பயணிகள் மற்றும் அவர்களை வரவேற்க வருபவர்களுக்கு குடிநீர், கழிவறை , இருக்கை வசதி கள் போன்றவை முறையாக இல்லை. உயிரை பணயம் வைத்து பணிபுரியும் நிலையில் பணியாளர்களின் அறை விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறி விட்டது. விமான நிலையம் இருப்பதை அறியும் விதமாக பெரிய அளவில் போர்டுகள் எதுவும் வைக்கப்படவில்லை.
தூத்துக்குடி, 
: தமிழகத் தின் தென்பகுதியில் கடலோரம் அமைந்துள்ள தூத்துக்குடி தொழில்வளம் மிகுந்த நகரமாகும். வாகனம், ரயில், கப்பல் மற்றும் விமானம் என நான்கு வகை யான போக்குவரத்து வசதி களையும் இந்நகரம் கொண்டுள்ளது. மின்உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி, கடல் சார் தொழில்கள் என தொழில் வளங்களுக்கு பஞ்சமே இல்லை.
தூத்துக்குடியை பொறுத்தவரை விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் ரயில் நிலையமும், விரிவாக்கத் துக்கு வாய்ப்பிருந்தும் கிடப் பில் போடப்பட்டுள்ள விமான நிலைய மேம்பாடும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே உள்ளன. இங்கிருந்து ரயில் சேவை போதிய அளவில் இல்லாத நிலை யில்,  சுமார் 15 கி.மீ. தொலை வில் புதுக்கோட்டைக்கு மிக அருகே கடந்த 1992ம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையம் அமைக்கப்பட்டது. 
 1992ம் ஆண்டு ஏப்.13ல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறை யாக வாயுதூத் ரக விமானம் இயக்கப்பட்டது. 
இதன் மூலம் வணிகர்கள்,  வெளிநாட்டு தொழில்முகவர்கள், அரசியல்பிரமுகர்கள், அதிகாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பயன்பெற்று வந்தனர். 
ஆனால் 14 மாதங் கள் மட்டுமே இந்த சேவை நடந்தது. அதன்பின்னர் சிலஆண்டுகள் விமானசேவை எதுவுமின்றி தூத்துக்குடி விமான நிலையம் மூடியே கிடந்தது. விமான சேவை யை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பலதரப்பினரும் வலியுறுத்தியதை தொடர்ந்து என்.இ.பி.சி. நிறுவனம் 1996ம் ஆண்டு பிப்.10ம் தேதி முதல் மீண்டும் சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. அதுவும் 6 மாதங்களோடு முற்றுப்பெற்று விட்டது. அதனைத்தொடர்ந்து விமான சேவை எதுவுமின்றி சுமார் 10 ஆண்டுகள் பெயரளவிற்கு விமான நிலையம் என்ற அந்தஸ்தை மட்டுமே தக்க வைத்திருந்தது. 
கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தூத்துக்குடி -சென்னைக்கு விமான சேவையை ஏர்டெக்கான் நிறுவனம் தொடங்கியது. பின்னர் இது கிங்பிஷர் நிறுவனத்துக்கு கைமாறியதை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து தினமும் கிங்பிஷர் விமானம் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக தூத்துக்குடி-சென்னை இடை யே ஒரேயொரு விமான சேவை மட்டுமே நடந்து வந்தது.
இந்நிலையில்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் காலைநேர விமான சேவையை சென்னை -தூத்துக்குடி இடையே துவங்கியது. இந்த விமான சேவை தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆனால் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து பெரிய அளவிலான விமானங்கள், இரவுநேர விமானங்களை இயக்க போதிய வசதிகள் செய்யப்படவில்லை. மழைக்காலங்களில் ஓடுதளத்தில் தண்ணீர் தேங்குவதால் விமானசேவை ஒட்டுமொத்தமாக தடைபடுகிறது.
விமான சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய பெருநகரங்களுக்கும் இங்கிருந்து விமான சேவையை துவக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கோரிக்கை களை நிறைவேற்றுவதற்கு விமான நிலையத்தின் ஓடு பாதை மற்றும் உள்கட்டமைப்பு வசதி குறைவு உள்ளிட்டவை தடையாகவே உள்ளன.
தூத்துக்குடி விமான நிலைய ஓடுபாதையின் நீளத்தை 1,340 மீட்டரி லிருந்து 1,585 மீட்டர் நீளமாக அதிகரித்தால் மட்டுமே இங்கு நடுத்தர ரக விமானங் களை கையாள முடியும். இரவுநேர விமானசேவை யை துவங்கவேண்டும் எனில் ஓடுபாதையில் விளக்குகள், விமானங்களுக்கான காலநிலையை கணிக்கும் நவீன தொழில்நுட்ப கருவி கள் அமைத்தல், தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்துல் போன்ற வசதி களை மேற்கொண்டால் மட்டுமே முடியும்.
இதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி தருமாறு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை இந்திய விமான நிலையங் கள் ஆணையம் கேட்டுக்கொண்டது. அதன்படி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 586 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது வரை எந்த பூர்வாங்க பணி களும் நடைபெறவில்லை. தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு விமான நிலைய விஸ்தரிப்பு அவசியம் என பொதுமக்கள், தொழிலதிபர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...