வெள்ளி, 2 நவம்பர், 2012

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, : தூத்துக் குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வி தகுதிகளை பதிவு செய்துள்ளவர்கள், தங்களது தகுதி யினை வளர்த்துக்கொள்ள தேவையான தொழில் பயிற்சி கட்டணம், போட்டி தேர்வு கட்டணம் போன்றவற்றை செலுத்திட உதவிடும் வகையில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே இந்த திட்டத் தில் பயன்பெற்றவர்கள் மீண்டும் உதவித்தொகை பெறலாம். இந்த திட்டத்தில் பயன்பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2, பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு முடித்துள்ளவர்கள், தங்கள் கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். 
ஆண்டு வருவாய் ரூ.50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். 
பதிவை தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண் டும். பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண் டும். எஸ்.சி, எஸ்.டி இனத்தை சார்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண் டும். 
மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெற எழுதப் படிக்கத்தெரிந்திருந் தால் மட்டும் போதுமானது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு முடி வுற்று இருந்தால் போது மானது. 
பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கும் நாளில் 40 வயதுக்குள் இருக்க வேண் டும். எஸ்.சி, எஸ்.டி. இனத் தை சார்ந்தவர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் அலு வலக வேலை நாளில், வேலைவாய்ப்பு அலுவலக அசல் பதிவு அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கி யில் கணக்கு ஆரம்பித்து வங்கிக் கணக்குப்புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டையுடன் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கும் பதிவுதாரர்களுக்கு, தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்புக் கான நேர்காணலுக்கும் பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...