வெள்ளி, 2 நவம்பர், 2012

கம்ப்யூட்டர் போட்டி: பேட்மாநகரம் மாணவிகள் சிறப்பிடம்

எம்.எம். கம்ப்யூட்டர் அகாதெமி, ரெனால்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மிஸ்டர் கேட்ஸ் கம்ப்யூட்டர் போட்டியில் பேட்மாநகரம் எம்.கே. உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
 6, 7-ம் வகுப்பு பிரிவில் மகாலட்சுமி, பாத்திமா சாரா ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பெற்றனர். 8, 9-ம் வகுப்பு பிரிவில் எம்.கே. உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜிஹைனா ரஷ்மின், அப்ரோஸ் பாத்திமா, சண்முகசுந்தர ராஜா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
 பரிசளிப்பு விழாவில் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரி பேராசிரியர் நிஸôர் வரவேற்றார். தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலப் பள்ளி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினார். 
 எம்.கே. உயர்நிலைப் பள்ளிச் செயலர் சாகுல்ஹமீது, தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், எம்.எம். மெட்ரிகுலேஷன் பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயன், சண்முகம், முத்துசிவம், ரெனால்ட்ஸ் நிறுவன உதவிப் பொது மேலாளர் பிரதாப் உள்ளிட்டோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் விஜய் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...