ட் 27,2015, 5:42 PM IST
ஏரல்,
ஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட பாலத்தில் மீண்டும் துவாரம் விழுந்தது. எனவே அங்கு புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தில் விரைவில் இணைப்பு சாலை அமைத்து திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.16¼ கோடியில் புதிய பாலம்தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வணிக நகரங்களில் ஏரலும் ஒன்றாகும். ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்லும். அப்போது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
எனவே அதன் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
புதிய பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமாக உள்ளது. அதனால், பல மாதங்களாக இணைப்புச்சாலை அமைக்கப்படவில்லை. தற்போது வனத்துறையின் அனுமதி பெற்று, தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கிருந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டு, காங்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து, மணலை குவித்து வருகின்றனர்.
துவாரம் விழுந்ததுஇதற்கிடையே ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் அடிக்கடி துவாரம் ஏற்படுகிறது. காங்கிரீட் கலவை மூலம் தற்காலிகமாக துவாரத்தை அடைத்தாலும், துவாரம் விழுவது தொடர்ந்து வருகிறது.
நேற்று காலையிலும் தரைமட்ட தாம்போதி பாலத்தில் மீண்டும் துவாரம் விழுந்தது. அதன் உள்ளே ஒரு ஆள் விழுந்து விடும் அளவுக்கு துவாரம் பெரிதாக இருந்தது.
மழைக்காலத்துக்குள் புதிய உயர் மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்புச்சாலை அமைத்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட பாலத்தில் மீண்டும் துவாரம் விழுந்தது. எனவே அங்கு புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தில் விரைவில் இணைப்பு சாலை அமைத்து திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.16¼ கோடியில் புதிய பாலம்தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வணிக நகரங்களில் ஏரலும் ஒன்றாகும். ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து செல்லும். அப்போது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
எனவே அதன் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.
புதிய பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் இடம் வனத்துறைக்கு சொந்தமாக உள்ளது. அதனால், பல மாதங்களாக இணைப்புச்சாலை அமைக்கப்படவில்லை. தற்போது வனத்துறையின் அனுமதி பெற்று, தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கிருந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டு, காங்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து, மணலை குவித்து வருகின்றனர்.
துவாரம் விழுந்ததுஇதற்கிடையே ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் அடிக்கடி துவாரம் ஏற்படுகிறது. காங்கிரீட் கலவை மூலம் தற்காலிகமாக துவாரத்தை அடைத்தாலும், துவாரம் விழுவது தொடர்ந்து வருகிறது.
நேற்று காலையிலும் தரைமட்ட தாம்போதி பாலத்தில் மீண்டும் துவாரம் விழுந்தது. அதன் உள்ளே ஒரு ஆள் விழுந்து விடும் அளவுக்கு துவாரம் பெரிதாக இருந்தது.
மழைக்காலத்துக்குள் புதிய உயர் மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்புச்சாலை அமைத்து போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக