ஏரல்: ஏரல் பகுதியில் பேரூராட்சி பணியாளர்கள் திடீர் சோதனை நடத்தி விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங் தலைமையில் இளநிலை உதவியாளர் கிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர்கள் எட்வர்ட் ஜெபசீலன், அடைக்கலம், அலுவலக பணியாளர்கள் ராஜா, அழகுமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் ஏரல் பேரூராட்சி பகுதிகளில் உள்ள தினசரி மார்க்கெட் மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏரல் பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங் தலைமையில் இளநிலை உதவியாளர் கிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர்கள் எட்வர்ட் ஜெபசீலன், அடைக்கலம், அலுவலக பணியாளர்கள் ராஜா, அழகுமுத்து மற்றும் சுகாதார பணியாளர்கள் ஏரல் பேரூராட்சி பகுதிகளில் உள்ள தினசரி மார்க்கெட் மற்றும் பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக