திங்கள், 19 மார்ச், 2012

சுங்க வரி உயர்வு ஏரலில் நகை கடைகள் அடைப்பு

ஏரல்: தங்கத்தின் மீதான சுங்க வரியை மத் திய பட்ஜெட்டில் உயர்த்தி யதை கண்டித்து நாடு முழு வதும் நகைக்கடைகளை அடைத்து வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். இதற்கு ஆதரவு தெரிவித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 
2வது நாளான நேற்று ஏரலில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகைக்கடை களை அடைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இன்றும் வியாபாரிகள் கடையடைப்பு செய்கின்றனர். 3 நாட்களாக நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகளுக்கு நகைகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...