அக்டோபர் 24, 2017, 04:45 AM
ஏரல் அருகே ரவுடி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏரல்,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் லெனின்(வயது 37). விவசாயியான இவர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். நேற்று மாலையில் இவர் பக்கத்து ஊரான மாரமங்கலத்தில் பயிரிடப்பட்ட தனது வாழை தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். இரவில் நீண்ட நேரமாகியும் லெனின் தனது வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் இரவு 12 மணி அளவில் லெனினின் உறவினரான அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, லெனினை தேடிச் சென்றார். அப்போது மாரமங்கலம் சிவன் கோவில் அருகில் லெனினின் மோட்டார் சைக்கிள் சரிந்து கிடந்தது. அதன் அருகில் உள்ள வயலில் லெனின், உடல் முழுவதும் பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இரவில் மோட்டார் சைக்கிளில் சென்ற லெனினை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மாரிமுத்து, ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த உடன் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சகாய ஜோஸ்(ஸ்ரீவைகுண்டம்), தீபு(திருச்செந்தூர்), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா(ஏரல் பொறுப்பு), வெங்கடேசன்(ஸ்ரீவைகுண்டம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட லெனினின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட லெனினுக்கு சோபியா தேவி(34) என்ற மனைவியும், 5 வயதில் லீனா, பெனட் என்ற இரட்டை பெண் குழந்தைகளும், ராபின்(1) என்ற மகனும் உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட லெனின் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடி-தடி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. லெனின் மீது ஏரல் போலீஸ் நிலையத்தில் 13 வழக்குகளும், ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டவர். மேலும் லெனின் ரவுடி பட்டியலிலும் உள்ளார்.
எனவே லெனினை முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனரா? அல்லது வயலை குத்தகைக்கு எடுத்து, வாழை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அதே ஊரைச் சேர்ந்த கோட்டாளம் என்பவரும் அரிவாள் வெட்டுக்காயத்துடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனவே அவருக்கும், லெனின் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல் அருகே ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் லெனின்(வயது 37). விவசாயியான இவர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். நேற்று மாலையில் இவர் பக்கத்து ஊரான மாரமங்கலத்தில் பயிரிடப்பட்ட தனது வாழை தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். இரவில் நீண்ட நேரமாகியும் லெனின் தனது வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதனால் இரவு 12 மணி அளவில் லெனினின் உறவினரான அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, லெனினை தேடிச் சென்றார். அப்போது மாரமங்கலம் சிவன் கோவில் அருகில் லெனினின் மோட்டார் சைக்கிள் சரிந்து கிடந்தது. அதன் அருகில் உள்ள வயலில் லெனின், உடல் முழுவதும் பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இரவில் மோட்டார் சைக்கிளில் சென்ற லெனினை மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மாரிமுத்து, ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த உடன் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சகாய ஜோஸ்(ஸ்ரீவைகுண்டம்), தீபு(திருச்செந்தூர்), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா(ஏரல் பொறுப்பு), வெங்கடேசன்(ஸ்ரீவைகுண்டம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட லெனினின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட லெனினுக்கு சோபியா தேவி(34) என்ற மனைவியும், 5 வயதில் லீனா, பெனட் என்ற இரட்டை பெண் குழந்தைகளும், ராபின்(1) என்ற மகனும் உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட லெனின் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடி-தடி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. லெனின் மீது ஏரல் போலீஸ் நிலையத்தில் 13 வழக்குகளும், ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டவர். மேலும் லெனின் ரவுடி பட்டியலிலும் உள்ளார்.
எனவே லெனினை முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனரா? அல்லது வயலை குத்தகைக்கு எடுத்து, வாழை பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அதே ஊரைச் சேர்ந்த கோட்டாளம் என்பவரும் அரிவாள் வெட்டுக்காயத்துடன் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனவே அவருக்கும், லெனின் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரல் அருகே ரவுடி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக