செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஏரலில் பிப்.16ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


அணையிலிருந்து ஆலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை கண்டித்து
ஏரலில் பிப்.16ல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஏரல், பிப். 14&
ஸ்ரீவைகுண்டம் அ¬ணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை நிறுத்தக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏரலில் வரும் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண் டும். தாமிரபரணி தண் ணீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமே பயன்படுத்த அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
வல்லநாட்டில் தடுப்பணை கட்டும் திட் டத்தை கைவிட வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏரலில் நாளை மறுநாள் (16ம் தேதி) மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
காய்கறி மார்க்கெட் அருகே நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை வகிக்கிறார்.
போராட் டக்குழு தலை வர் கந்த சாமி, மாவட்ட துணைத்தலைவர் சீனி வாசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவரும், எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்கின்றனர். ஸ்ரீவை. வடகால், தென்கால் பாசனத்தை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்குமாறு போராட்டக்குழு தலை வர் கந்தசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...