சனி, 11 பிப்ரவரி, 2012

ஏரல், ஜெயதுரை எம்.பி. பங்கேற்று


ஏரல், பிப். 11&
ஏரல் அருகே வரண்டியவேல் அககோபாலபுரம் இந்து நடுநிலைப்பள்ளி 73வது ஆண்டு விழா மற்றும் இலவச சீருடை மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் ஜெயதுரை எம்.பி. பங்கேற்று பள்ளியின் கல்வி புரவலர் திட்ட கல்வெட்டினை திறந்து வைத்தும், இலவச சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு தரப்பட்ட கல்வி முறைகளை ஒருங்கிணைத்து கிராமப்புற பயிலும் மாணவ&மாணவிகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சமச்சீர் கல்வி திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இன்று இத்திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் நடுநிலையாளர்களும் பாராட்டுகின்றனர். உலகிலேயே அதிக இளைஞர்களை அதிகமாக கொண்ட நாடு இந்தியாதான். இங்கு 50 சதவீதத்திற்கும் மேல் இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்களின் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் இந்தியா விரைவில் வல்லரசாகும் என்றார்.
விழாவில் ஏரல் பேரூ ராட்சி துணைத்தலைவர் மணிவண்ணன், வரண்டியவேல் பஞ்சாயத்து தலை வர் சனகர், பள்ளி நிர்வாக குழுதலைவர் ஆனந்தராம், செயலர் சிவகார்மேகம், நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜானகிராமன், டாக்டர் விமலாகுமாரி, ஆழ்வார் திருநகரி உதவி தொடக்க கல்வி அலு வலர் தாசன்பொன்ராசு, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கணேசன், முன்னாள் மாவட்ட விவ சாய அணி அமைப்பாளர் நட்டாத்தி காளிதாஸ் பண்ணையார், ராஜபாளையம் தி.மு.க. அவைத்தலைவர் மரியான்ஸ், துரை, கந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திமுக ஆட்சியில் கல்விக்கு ஏராளமான சலுகைகள்
ஜெயதுரை எம்.பி. பேச்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...