திங்கள், 20 பிப்ரவரி, 2012

ஏரல் நாளை வியாபாரிகள் கடையடைப்பு


மின்வெட்டுக்கு கண்டனம்
ஏரல்&சாத்தான்குளத்தில் நாளை வியாபாரிகள் கடையடைப்பு
சாத்தான்குளம், பிப்.20&
மின்வெட்டுக்கு கண் டனம் தெரிவித்து ஏரல், சாத்தான்குளத்தில் நாளை வியாபாரிகள் முழு கடையடைப்பு செய்கிறார்கள்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் மின்தடை நேரம் அதிகாரித்து வருகிறது. தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் பவர் கட் செய்யப்படுகிறது. இத னால் தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் அடிக் கடி பவர் கட் ஆவதால் பரீட்சைக்கு படிக்கும் மாணவ&மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இரவில் தூக்கத்தை இழந்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தவிக்கிறார்கள்.
மின்வெட்டுக்கு கண் டனம் தெரிவிக்கும் வகை யில் தமிழகம் முழுவதும் வியாபாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளார் கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வியாபார ஸ்தலங்களில் முக்கிய ஊரான ஏரல் மற்றும் சாத்தான்குளத்தில் நாளை வியாபாரிகள் கடையடைப்பு செய்கிறார்கள்.
இதற்கான கூட்டம் சாத்தான்குளம் வர்த்தக சங்க கட்டித்தில் தலைவர் பாலசிங் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்கள் மணவாளன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜெயராஜேஷ்குமார் வரவேற்றார். இதில், அடிக்கடி மின் வெட்டு இருப்பதால் சாத்தான்குளத்தில் நாளை (21ம்தேதி) முழு கடையடைப்பு நடத்துவது, அனைத்து வர்த்தகசங்கம் மற்றும் பல்வேறு சங்கங்கள் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கணேஷ்குமார், அலெக்ஸ், பேரூராட்சி கவுன்சிலர் இஸ்மாயில், பேச்சிமுத்து, முன்னாள் வர்த்தகசங்க தலைவர் சுந்தர், முன்னாள் செயலாளர் வேணு கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளத்தில் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இதுபோல் ஏரலிலும் நாளை வியாபாரிகள் முழு அடைப்பு செய்கிறார்கள். வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் தானுலிங்கப்பிள்ளை தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இங்கு 600க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...