ஏரல்:ஏரல் லோபோ மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது. பள்ளியின் 28வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது. விøளாயட்டு விழா நிகழ்ச்சிகளை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன் துவக்கி வைத்தார். கிராம முன்னேற்ற சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். ஆசிரியை ஜெயசுதா வரவேற்றார். விளையாட்டுப்போட்டிகளுடன் யோகா, கராத்தே, ஜிம்னாஸ்டிக், கிராமிய நடனம் ஆகியவை நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள், மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழவல்லான் பஞ்.,தலைவர் துளசி ஜெயப்பிரகாஷ் பரிசு வழங்கினார்.
ஆசிரியை செல்வ மலர் நன்றி கூறினர். பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி தாளாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியை சகாயராணி வரவேற்றார். பள்ளி முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார். ஏரல் பஞ்., சேர்மன் பாலகிருஷ்ணன், சூளைவாய்க்கால் பஞ்., தலைவர் அனிஸ், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பாக்கர் அலி ஆகியோர் பேசி கடந்த ஆண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வருகை தந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற சுஷ்மிதா, சாயிகிருபா, சமீமாபர்வீன் ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ஜெயலட்சுமி, பள்ளி நிறுவனர் முருகன் ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினர். மேலும் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
ஆசிரியை செல்வ மலர் நன்றி கூறினர். பள்ளி ஆண்டு விழாவில் பள்ளி தாளாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியை சகாயராணி வரவேற்றார். பள்ளி முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார். ஏரல் பஞ்., சேர்மன் பாலகிருஷ்ணன், சூளைவாய்க்கால் பஞ்., தலைவர் அனிஸ், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பாக்கர் அலி ஆகியோர் பேசி கடந்த ஆண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வருகை தந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற சுஷ்மிதா, சாயிகிருபா, சமீமாபர்வீன் ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் ஜெயலட்சுமி, பள்ளி நிறுவனர் முருகன் ஆகியோர் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினர். மேலும் 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மாடசாமி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக