ஏரல் & நெல்லை அரசு பஸ்
திடீரென நிறுத்தப்பட்டது
ஏரல், பிப். 8:
ஆத்து�ரில் இருந்து ஏரல் வழியாக நெல்லைக்கு செல்லக்கூடிய அரசு பஸ் கடந்த 5 நாட்களாக இரவு நேரத்தில் இயக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஏரலில் இருந்து நெல் லைக்கு 3 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே ஏரல் வழியாக இயங்கிய முக்காணி & பாபநாசம் (தடம் எண் 23), ஆத்து�ர் & குற்றாலம் (தடம் எண் 135ஏ) ஆகிய இரண்டு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது ஆத்தூரில் இருந்து ஏரல் வழியாக நெல்லைக்கு இயக்கப்பட்ட (தடம் எண் 244) அரசு பஸ்சை நிறுத்துவதற்காக முதல் கட்ட நடவடிக்கையாக இரவு 7.30 மணி டிரிப் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏரலில் இருந்து நெல் லைக்கு மாலை 6 மணி பஸ்சை விட்டால் பின்னர் இரவு 8.30 மணிக்கு தான் அடுத்த பஸ் உள்ளது. எனவே இரவு நேரத்தில் நிறுத்தப்பட்ட தடம் எண் 244 அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என வியாபாரிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் முக் காணி&பாவநாசம், ஆத் து�ர்&குற்றாலம் பஸ்களை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரல் வழித்தடத்தில் கூடுத லாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் ஏரல் சாந்தக்குமார் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளார்.
பொதுமக்கள் அவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக