ஏரல் : ஏரலில் நேற்று இரண்டரை அடி நீளமுள்ள மண்உளி பாம்பு ஒன்று பிடிபட்டது. ஏரல் நாடார் தெருவை சேர்ந்த பெரியசாமி, பெனடிக்ட், வைணபெருமாள், மாரியப்பன், ஆத்திப்பழம் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து வாய்க்காலுக்கு குளிக்க சென்று கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள தென்னந்தோப்பிலிருந்து வெளியேறிய சுமார் இரண்டரை அடி நீளமுள்ள மண்உளி பாம்பு ஒன்றை பார்த்தனர். உடனடியாக அதைப் பிடித்து வைத்து ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஏரல் போலீசார் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஸ்ரீவை., வனத்துறையினர் வந்து அப்பாம்பை கைப்பற்றினர். பின்னர் அந்த பாம்பு வல்லநாடு மலையில் கொண்டு விடப்பட்டது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு உமரிக்காடு பகுதியில் இதே போன்று மண்உளி பாம்பு ஒன்று பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏரல் போலீசார் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஸ்ரீவை., வனத்துறையினர் வந்து அப்பாம்பை கைப்பற்றினர். பின்னர் அந்த பாம்பு வல்லநாடு மலையில் கொண்டு விடப்பட்டது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு உமரிக்காடு பகுதியில் இதே போன்று மண்உளி பாம்பு ஒன்று பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக