வியாழன், 5 ஜூலை, 2012

ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலசுவாமி கோயில்

ஏரல் : ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வரும் 9ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. ஆடி அமாவாசை திருவிழா வரும் 18ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது).
புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான ஏரல் ஸ்ரீ சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு ஆண்டும் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு செல்வர். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 9ம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அன்று முதல் 17ம் தேதி வரை தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 18ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. அன்று மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனம், பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனம், இரவு சுவாமி மூலஸ்தானம் வந்து சேர்தல், கற்பூர தரிசனம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...