சாயர்புரம் : மறைந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ.,ஊர்வசி செல்வராஜ் நினைவாக ஏரல் நகர மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்., தூத்துக்குடி அகர்வால் கண் ஆஸ்பத்திரியும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏரல் தூய தெரசாள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
முகாமிற்கு ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர்அலி தலைமை வகித்தார். நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா, ஏரல் டவுன் பஞ்.,தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் மணிவண்ணன், ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்.,தலைவர் கந்தசாமி, நல்லகண்ணு, முன்னாள் யூனியன் கவுன்சிலர் மூக்கன்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏரல் ஒத்தாசை மாதா கோயில் பங்கு தந்தை பீற்றர் ஆசியுரை வழங்கினார். இலவச கண் சிகிச்சை முகாமை மாவட்ட காங்.,தலைவர் ஜஸ்டின் துவக்கி வைத்தார். கண் மருத்துவ குழுவின் மேலாளர் சுப்பிரமணியன், ஜெயகாந்தன், நடராஜன், டாக்டர் கல்பனா ராஜேந்திரகுமார் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதில் 66 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 15 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பீஸ்மி சுல்தான், நடராஜன், அந்தோணிகாந்தி, வீரசுப்பிரமணியன், ஐயம்பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாமிற்கு ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர்அலி தலைமை வகித்தார். நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா, ஏரல் டவுன் பஞ்.,தலைவர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் மணிவண்ணன், ஸ்ரீவைகுண்டம் வட்டார காங்.,தலைவர் கந்தசாமி, நல்லகண்ணு, முன்னாள் யூனியன் கவுன்சிலர் மூக்கன்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏரல் ஒத்தாசை மாதா கோயில் பங்கு தந்தை பீற்றர் ஆசியுரை வழங்கினார். இலவச கண் சிகிச்சை முகாமை மாவட்ட காங்.,தலைவர் ஜஸ்டின் துவக்கி வைத்தார். கண் மருத்துவ குழுவின் மேலாளர் சுப்பிரமணியன், ஜெயகாந்தன், நடராஜன், டாக்டர் கல்பனா ராஜேந்திரகுமார் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதில் 66 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 15 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பீஸ்மி சுல்தான், நடராஜன், அந்தோணிகாந்தி, வீரசுப்பிரமணியன், ஐயம்பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக