ஏரல், : ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா 9ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதையோட்டி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. இரவில் கேடயச்சப்பரத்தில் சுவாமி திருக்கோலம் கோயிலை வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி இரவில் திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்திலும், 11ம் தேதி இரவில் முல்லை சப்பரத்தில் சதாசிவமூர்த்தி அலங்காரத்திலும், 12ம் தேதி இரவில் பூங்குயில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரத்திலும், 13ம் தேதி இரவு 8 மணிக்கு திருப்புன்னைச் சப்பரத்தில் நவநீதகிருஷ்ண அலங்காரத்திலும், 14ம் தேதி இரவு ஏகசிம்மாசன சப்பரத்தில் பாலசேர்மன் அலங்காரத்தில் கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
15ம் தேதி இரவில் பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்திலும், 16ம் தேதி இரவில் வில்வச்சப்பரத்தில் ராஜாங்க அலங்காரத்தில் கோயிலை வலம் வருதலும், சென்னை சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 17ம் தேதி இரவு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி ஏரல் நகர்வீதி வலம் வருதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய விழாவான ஆடி அமாவாசை திருவிழா 18ம் தேதி நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பகப்பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளலும் நடக்கிறது. 19ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், 6.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பகல் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனமும், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் காட்சியும், திருக்கற்பூர தீபதரிசனமும் நடக்கிறது.
20ம் தேதி திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருநை நதியில் சுவாமி நீராடலும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரமும், இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியநாடார் செய்து வருகிறார்.
இக்கோயில் ஆடி அமாவாசை திருவிழா 9ம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இதையோட்டி சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கிறது. இரவில் கேடயச்சப்பரத்தில் சுவாமி திருக்கோலம் கோயிலை வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி இரவில் திருஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்திலும், 11ம் தேதி இரவில் முல்லை சப்பரத்தில் சதாசிவமூர்த்தி அலங்காரத்திலும், 12ம் தேதி இரவில் பூங்குயில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரத்திலும், 13ம் தேதி இரவு 8 மணிக்கு திருப்புன்னைச் சப்பரத்தில் நவநீதகிருஷ்ண அலங்காரத்திலும், 14ம் தேதி இரவு ஏகசிம்மாசன சப்பரத்தில் பாலசேர்மன் அலங்காரத்தில் கோயிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
15ம் தேதி இரவில் பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் கோலத்திலும், 16ம் தேதி இரவில் வில்வச்சப்பரத்தில் ராஜாங்க அலங்காரத்தில் கோயிலை வலம் வருதலும், சென்னை சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. 17ம் தேதி இரவு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி ஏரல் நகர்வீதி வலம் வருதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
முக்கிய விழாவான ஆடி அமாவாசை திருவிழா 18ம் தேதி நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 8 மணிக்கு 1ம் காலம் கற்பகப்பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளலும் நடக்கிறது. 19ம் தேதி காலை 4 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், 6.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், பகல் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரிசனமும், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10 மணிக்கு கோயில் மூலஸ்தானம் வந்து சேரும் காட்சியும், திருக்கற்பூர தீபதரிசனமும் நடக்கிறது.
20ம் தேதி திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருநை நதியில் சுவாமி நீராடலும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரமும், இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கள தரிசனமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியநாடார் செய்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக