ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி கிடைத்துள்ளது கண்டு பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷன் திருச்செந்தூர் டூ திருநெல்வேலி இடையேயான ரயில் பாதையில் மிக முக்கியமான சந்திப்பு ஸ்டேஷனாகும். இதனைச் சுற்றியுள்ள பல கிராம மக்களும் ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 4 மணி வரையிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்பு தினமும் காலை 8 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. அப்போது ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் மட்டும் தட்கல் டிக்கெட் முன்பதிவு வசதி செய்து கொடுக்கப்படாமல் இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
தட்கல் டிக்கெட் எடுக்க அருகில் உள்ள காயல்பட்டணம், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் திருச்செந்தூர் டூ திருநெல்வேலி இடையே உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் தட்கல் வசதி செய்ய வேண்டும் என ரயில்வே துறையினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இருப்பினும் போதி ய பணியாளர்கள் இல்லாததாலும், காலை 8 மணிக்கு ரயில் கிராசிங் இருந்ததாலும் டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தனர். இதுகுறித்து கடந் த சில தினங்களுக்கு முன்பு தினமலரில் சுட்டிக் காட்டப்பட்டது. இதனிடையே கடந்த 10ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தை காலை 10 மணி முதல் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் வழங்கும் முறை துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே ஸ்டேஷன் முன்பு அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர். ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் வசதி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷன் திருச்செந்தூர் டூ திருநெல்வேலி இடையேயான ரயில் பாதையில் மிக முக்கியமான சந்திப்பு ஸ்டேஷனாகும். இதனைச் சுற்றியுள்ள பல கிராம மக்களும் ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 4 மணி வரையிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. முன்பு தினமும் காலை 8 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. அப்போது ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் மட்டும் தட்கல் டிக்கெட் முன்பதிவு வசதி செய்து கொடுக்கப்படாமல் இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
தட்கல் டிக்கெட் எடுக்க அருகில் உள்ள காயல்பட்டணம், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் திருச்செந்தூர் டூ திருநெல்வேலி இடையே உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் தட்கல் வசதி செய்ய வேண்டும் என ரயில்வே துறையினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இருப்பினும் போதி ய பணியாளர்கள் இல்லாததாலும், காலை 8 மணிக்கு ரயில் கிராசிங் இருந்ததாலும் டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தனர். இதுகுறித்து கடந் த சில தினங்களுக்கு முன்பு தினமலரில் சுட்டிக் காட்டப்பட்டது. இதனிடையே கடந்த 10ம் தேதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தை காலை 10 மணி முதல் என ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் வழங்கும் முறை துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே ஸ்டேஷன் முன்பு அறிவிப்பும் வெளியிட்டுள்ளனர். ஆறுமுகநேரி ரயில்வே ஸ்டேஷனில் தட்கல் வசதி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக