செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தண்ணீர் லாரிகளால் ஏரலில் போக்குவரத்து நெருக்கடி

ஏரல்,: தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகளால் ஏரலில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
ஏரல் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்துள்ளதாலும் ஸ்ரீவை குண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் வந்து 4 மாதங்களுக்கு மேல் ஆனதாலும் ஏரல் மற்றும்  சுற்று வட்டாரப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் வறண்டு பாலைவனம் போல காட்சி அளிக்கின்றன.
ஏரல் அருகே மங்கலகுறிச்சி, பெருங்குளம், ராஜபதி, காரச்சேரி உள்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போர்வெல் அமைத்து நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு லாரிகளில் ஏரல் வழியாக தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்கும் ஏரலில் போக்குவரத்து நிறைந்து காணப்படும். 
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகளால் ஏரலில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
இதனால் மக்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். மேலும் லாரிகள் எப்போது  நகர்பகுதிகளிலும் வேகமாக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. 
இதனால் ஏரல் காந்திசிலை பஸ்நிறுத்தம், பெட்ரோல் பங்க் வளைவுபாதை, பஸ்நிலையம் அருகே என பல்வேறு இடங்களில் பெரிய அளவு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரல் வழியாக அதிவேகமாக செல்லும் தண்ணீர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர் கொள்ளை போவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என ஏரல் பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...