வியாழன், 13 செப்டம்பர், 2012

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி முகாம்

ஆறுமுகனேரி, செப். 12: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கு காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
 முகாமை, கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.எம். மிஸ்கீன் ஸôஹிப் ஃபாஸீ தொடக்கிவைத்தார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி இளநிலை உதவியாளர் ஃபக்ருத்தீன் அலீ அஹ்மத், அதன் தன்னார்வ சேவையாளர்கள் அபூ நாஸர், நெய்னா முஹம்மத் மேற்பார்வையில் முகாம் நடைபெற்றது.
 மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் கே. சந்தோஷ்குமார், உதவியாளர் காதர்ஷா, கே.எம்.டி. மருத்துவமனை பொது மருத்துவர் ராணி டப்ஸ், சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், வட்டார சுகாதார ஆய்வாளர்களான சங்கரசுப்பு, ஜெய்சங்கர், சோமசுந்தரம், ஆனந்தராஜ், செவிலியர் எஸ். கோமதி, கே. அழகு மீனாட்சி, ஏ. கஸ்தூரி பாய் ஆகியோரடங்கிய மருத்துவக் குழுவினர், ஹஜ் பயணிகள் 100 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.
 ஏற்பாடுகளை, கே.எம்.டி. மருத்துவமனைச் செயலர் எம்.எம். முஃதஸிம், மேலாளர் அப்துல் லத்தீப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளைத் தலைவர் கே.எஸ். முஹம்மத் நாஸர், செயலர் ஏ.எல்.எஸ். அபூஸôலிஹ், பொருளாளர் எம்.ஏ. முஹம்மத் ஹஸன், நிர்வாகிகளான பி.எம்.எஸ். அமானுல்லாஹ், எம்.கே. முஹம்மத் அலீ, அரபி ஷாஹுல் ஹமீத், எஸ்.இ. அஹ்மத் தம்பி, எம்.எல். ஷேக்னா லெப்பை, எஸ்.ஏ. உமர் ஸôஹிப், எம்.எம்.எஸ். இப்ராஹிம் அத்ஹம் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...