ஏரல்: இஸ்லாமியர்கள் இறைதூதர் முகமது நபியை இழிவாக சித்தரித்ததை கண்டித்து ஏரலில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அமெரிக்காவில் முகமது நபியை இழிவாக சித்தரித்து குரும்படம் எடுத்தவரை தண்டிக்க கோரி ஏரலில் கருப்புக் கொடியேற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏரல் வடக்கு பள்ளி ஜமாத் தலைவர் சகாபுதீன் தலைமை வகித்தார். சிறுத்தொண்டநல்லூர் ஜமாத் தலைவர் ஜெய்னுல் ஆப்தீன், ஏரல் புதுமனை பள்ளி ஜமாத் தலைவர் அப்துல் சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமுக.,மாநில பேச்சாளர் காசிம் பிர்தவ்சி, மாவட்ட தலைவர் ஆசாத், ஏரல் பாக்கர்அலி ஆகியோர் பேசினர். ஏரல் சுற்றுவட்டார முஸ்லிம்கள் பெண்கள் உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இத்திரைபடத்தை எடுத்தவர்களை தூக்கிலிட வேண்டும், இணையதளத்திலிருந்து முழுவதுமாக நீக்க வேண்டும், இந்திய அரசு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் உட்பட தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு
ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...
-
Facebook Google+ Mail Text Size Print தூத்துக்குடியில், மத்திய அரசை கண்டித்து ஜமா அத்துல் உலமா சபை சார்பில் கண...
-
Facebook Twitter Mail Text Size Print ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு....
-
Facebook Google+ Mail Text Size Print ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி ரெயிலை 18 ஆயிரம் மாணவர்கள் பார்வையிட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக