வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஏரலில் ரூ.16¼ கோடி செலவில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் திறக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஏரலில் ரூ.16¼ கோடி செலவில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தில் இணைப்பு சாலை அமைத்து, விரைவில் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ரூ.16¼ கோடி செலவில் உயர்மட்ட பாலம்தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய வணிக நகரங்களில் ஒன்றாக ஏரல் உள்ளது. ஏரலில் இருந்து குரும்பூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. மழைக் காலங்களில் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது, தரைமட்ட தாம்போதி பாலத்தை மூழ்கடித்து செல்லும். இதனால் ஏரலில் இருந்து குரும்பூர், நாசரேத், தென்திருப்பேரை, சேதுக்குவாய்த்தான், குரங்கணி செல்லும் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது.
எனவே கடந்த 2011– 2012–ம் ஆண்டு நபார்டு ஆர்.ஐ.டி.பி.எப். திட்டத்தின் கீழ், ஏரல் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தரைமட்ட தாம்போதி பாலத்தின் அருகில் ரூ.16 கோடியே 39 லட்சம் செலவில் புதிய உயர் மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இணைப்பு சாலைஅமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அடிக்கல் நாட்டி, புதிய உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். கடந்த 28–6–2012 முதல் பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. 18 மாதங்களில் பாலம் கட்டி முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தாமிரபரணி ஆற்றின் நடுவில் 20 தூண்களை அமைத்து புதிய உயர் மட்ட பாலம் அமைக்கப்பட்டது.
பாலத்தின் வடக்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைப்பதற்கான நிலம் வனத்துறைக்கு சொந்தமானது ஆகும். இதனால் வனத்துறை அனுமதி பெறுவதற்காக தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை.
ஓட்டை விழுந்த தாம்போதி பாலம்இதனால் புதிய பாலம் கட்டப்பட்ட நிலையிலும், கடந்த ஒரு ஆண்டாக தெற்கு பகுதியில் இணைப்பு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் மேல் பகுதியில் உடை மரங்கள் ஆங்காங்கே முளைத்து உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தரைமட்ட தாம்போதி பாலத்தின் நடுவில் சில இடங்களில் ஓட்டை விழுந்து உள்ளன. இதனால் அந்த இடங்களில் அடிக்கடி வாகன விபத்துகள் நிகழ்கின்றன.
எனவே மழைக்காலத்துக்கு முன்பாக புதிதாக கட்டப்பட்ட உயர் மட்ட பாலத்தின் தெற்கு பகுதியில் வனத்துறை அனுமதி பெற்று, இணைப்பு சாலை அமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...