ஏரல் தாமிரபரணி ஆற்றின்
தாம்போதி பாலத்தில் மெகா பள்ளம்
விபத்து அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்
ஏரல், ஆக. 11:
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் 2 இடங்களில் மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளதால் எந்நேரத்திலும் பாலம் உடைந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத் தில் முக்கிய வணிகநகரமாக ஏரல் உள்ளது. இப்பகுதியை தென்கரையோர பகுதி ஊர்மக்களுடன் இணைப்பது ஏரல் ஆற்றுப்பாலம் ஆகும். இந்த ஆற்றுப்பாலம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மழைக்காலத்தில் இந்த பாலம் தண்ணீரில் மூழ்குவதால் ஏரல்&குரும்பூர் போக்குவரத்து துண்டிக்கபட்டு வந்தது. இதனால் ஏரலில் வியாபாரம் பாதிப்ப தோடு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் ஏரல் பகுதிக்கு வரமுடியா மல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இதன் அருகிலேயே ரூ.16 கோடி செலவில் புதிய பாலம் அமைக்கபட்டது. ஆனால் இணைப்பு சாலை அமைக்க வனத்துறை அனுமதி கிடைக்காததால் பாலப்பணி ஒரு வருடமாக கிடப்பில் போடப்பட்டுள் ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன் பழைய பாலத் தின் ஓரத்தில் பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் பாலம் எந்நேரத்திலும் உடையலாம் என்ற நிலை ஏற்பட்டது. எனவே போக்குவரத்திற்கு முக்கிய பாலமாக இருக்கும் இந்த பாலத்தை உடன் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அரசு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலர் இவ்வழியாக சென்று வந்தாலும் உடைந்த இடத்தை சீரமைப்புக்கான எந்தவித வேலையும் நடைபெறவில்லை. இந்நிலையில் உடைந்த பாலத்தின் அருகிலேயே நடுப்பாலத்தில் இன்னொரு பெரிய பள்ளம் விழுந்துள்ளது. அதிகாரிகள் இதனையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பாலம் முற்றிலும் அந்த இடத்தில் உடைந்து ஏரல்&குரும்பூர் நேரடி போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உடைந்த பாலத்தின் ஓட்டையில் யாரும் விழுந்துவிடக்கூடாது என கல்லை தூக்கி பொதுமக்கள் வைத்துள்ளனர்.
பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பைக் மற்றும் வாகனத்தில் வருபவர்கள் இந்த கல்லில் மோதியும், பாலத்தின் ஓட்டையில் விழுந்தும் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். புதிய பாலத்தின் வேலையும் நடைபெறாத நிலையில் பழைய பாலமும் உடைந் தால் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே இனியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏரல் பகுதி வியாபாரி கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இரண்டு இடங்களில் பெரிய பள்ளத்தால் விபத்து ஏற்பட்டு வருகிறது. உள்படம்: அபாயகரமான பள்ளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக