ஏரல், ஆக. 20:
ஸ்ரீவை குண்டம் வடகால் வாய்க் காலை ஆக்கிரமிப்பு செய் துள்ள செடி, கொடிகள் மற்றும் விழுந்து கிடக்கும் மரங்களால் தண்ணீர் செல்வது தடை பட்டு வந்தது. இதனை அப்பகுதி பாசன விவசாயிகள் அகற்றினர்.
ஏரல் அருகே உள்ள கொற்கை குளத்தை நம்பி ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடக்கிறது. இதில் 15 லட்சம் வாழைகளுக்கு மேல் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த குளத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வடகால் மூலம் தண்ணீர் வந்து ஏரல் அருகே சூளைவாய்க்கால் பாலம் மடை வழியாக வாய்க்கால் மூலம் குளத்திற்கு செல் லும்.
கடுமையான வறட்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தொடர்ந்து 2 மாதங்களாக தண்ணீர் வராத தால் குளம் காய்ந்து வாழைகள் கருக தொடங் கின. இதனால் கொற்கை குளம் பாசனத்தை நம்பியுள்ள உமரிக்காடு, முக் காணி, கொடுங்கனி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் விவசாய சங்கத்தினர் மற்றும் தாமிரபரணி பாசன போராட்டக்குழுவை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கருகும் பயிர் களை காப் பாற்ற ஸ்ரீவை குண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தினர். இதையடுத்து கடந்த 20 நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் வடகால் வாய்க்காலில் இருந்து நேரடியாக மடை மூலம் தண்ணீர் செல்லும் நிலங்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் கிடைத் தது.
ஆனால் குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேர வில்லை. வாய்க்காலில் தண்ணீர் குறைவாக வந்ததாலும் செடி, கொடிகள் மற்றும் அருகில் உள்ள காய்ந்து போன மரங்கள் தண்ணீரில் விழுந்து தடை ஏற்படுத்தியதாலும் நீரோட்டம் தடைபட் டது. இதனால் குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேர வில்லை.
கொற்கை குளத்தில் 12 பாசன மடைகள் உள்ளன. இதில் 5 மடைகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதையடுத்து கொற்கை பாசன பகுதியை சேர்ந்த உமரிக் காடு வாழை விவசாய சங்க தலைவர் செந்தூர் பாண்டி, முக்காணி தலைவர் கோட்டை, கொடுங்கனி தலைவர் நாராயணன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி மூலம் வடகால் வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள செடி, கொடி மற்றும் தண்ணீரில் விழுந்து கிடந்த மரங்களை நேற்று அகற்றினர். மேலும் 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீரில் இறங்கி செடி, கொடிகளை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து செந்தூர் பாண்டி கூறுகையில், �கருகும் பயிர்களை காப்பாற்ற திறந்துவிட்ட தண்ணீர் இந்த ஆக்கிரமிப்பு செடிகளால் ஒழுங்காக குளங்களுக்கு வந்து சேர வில்லை. இதனால் கொற்கை குளத்து பாசனத்தில் உள்ள வாழைகள் கருகி வருகின்றன. இந்த வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை குறைத்து விவசாயத்திற்கு இன்னும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் முழுமை யாக கிடைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
விவசாயிகளே அகற்றினர்
ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ள செடி, கொடிகளை கொற்கை பாசன விவசாயிகள் தண்ணீரில் இறங்கி அகற்றினர்.
இதுகுறித்து செந்தூர் பாண்டி கூறுகையில், �கருகும் பயிர்களை காப்பாற்ற திறந்துவிட்ட தண்ணீர் இந்த ஆக்கிரமிப்பு செடிகளால் ஒழுங்காக குளங்களுக்கு வந்து சேர வில்லை. இதனால் கொற்கை குளத்து பாசனத்தில் உள்ள வாழைகள் கருகி வருகின்றன. இந்த வாழைகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை குறைத்து விவசாயத்திற்கு இன்னும் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். வாய்க்காலில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி குளத்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் முழுமை யாக கிடைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக