விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு
ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலை செடிகள் அகற்றம்
ஏரல், ஆக. 25:
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் ஏரல் ஆற்றுப்பாலம் அருகில் பொது மக்கள் குளிக்கும் இடத்தில் ஆக்கிர மித்துள்ள அமலைச்செடி களை அகற்றினர். மாவட்ட மாணவ ரணி துணைச் செயலாளர் கண்ணன் தலைமையில், ஏரல் நகர செயலாளர் மூர்த்தி, துணைச் செய லாளர் முத்துக்குமார், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் அந்தோணி, நகர இளைஞ ரணி அன்னராஜன், பொரு ளாளர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கண்ணன் கூறுகையில், �ஏரல் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க முடியாத அளவுக்கு அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் அசுத்தமாகி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அமலைச்செடிகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்� என்றார்.
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஏரல் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளை தேமுதிகவினர் அகற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக