சிறுத்தொண்டநல்லூர்
சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா
ஏரல், ஆக.11:
சிறுத் தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழா நடந்தது. இதனை முன்னிட்டு காலை அம்பாள் தபசு புறப்படுதல், ஏரல் தாமிரபரணி ஆற்றி லிருந்து பால்குடம் எடுத்து நகர் வலம் வருதல், பகல் 12 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங் கார தீபாராதனையும் நடந்தது.
மாலை 6 மணிக்கு சங்கரேஸ்வரர் சங்கர நாராயண ராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக திரைப் பட மெல்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து இரவு 1 மணிக்கு சங்கரநாராயணர் அம்பாளுக்கு சங்கரேஸ்வரராக காட்சி அளிக்கும் வைபவம் நடந்தது.
பின்னர் சங்கரேஸ்வரர், கோமதி அம்பாள் பொன்சப்பரங்களில் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை முன்னிட்டு காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கரேஸ்வரர் கோயில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
சிறுத்தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித்தபசு விழாவில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக