ரல், ஆக. 24:
இஸ்ரேலை கண்டித்து ஏரலில் முஸ்லிம் ஜமாத்த�ர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த இரண்டு வருடங்களாக தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும், மத்திய அரசு இஸ்ரேல் உடனான உறவை மறு பரீசிலனை செய்ய கோரியும் ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த முஸ்லிம் ஜமாத் சார்பில் ஏரல் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏரல் முஸ்லிம் வணிகர்நல சங்கம் தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்தார். நிஜாம்முதீன், இக்பால், முகமது உசேன், சிந்தாகனி முன்னிலை வகித்தனர். சேக் அஷ்ரப் அலி பைஜி துவக்க வைத்தார். பாப்பு லர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பி னர் முகைதீன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், இஸ்ரேல் தாக்குதலால் பொதுமக்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்து 500க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனை கள், வீடுகள், பள்ளி வாசல்கள் அழிக்கப்பட்டுள்ளன. இத்தகைய செயலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.சூழைவாய்க்கால் முன் னாள் பஞ்சாயத்து தலை வர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து ஏரலில் முஸ்லிம் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏரலில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேலை கண்டித்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக