வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஏரலில் விபத்து பஸ்– மோட்டார் சைக்கிள் மோதல்; கூட்டுறவு பணியாளர் பலி

பஸ்–மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் கூட்டுறவு பணியாளர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–
கூட்டுறவு பணியாளர்தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேயன்விளை கீழத்தெருவைச் சேர்ந்தவர், அருள் (வயது 40). இவர் ஆறுமுகநேரி ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் ஏரலை அடுத்த சிறுத்தொண்டநல்லூரில் நடந்த கோவில் விழாவையொட்டி, அங்குள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். நேற்று மாலையில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரிக்கு புறப்பட்டு வந்தார்.
பஸ் மோதி பலிஏரல் தாமிரபரணி ஆற்றின் தரைமட்ட தாம்போதி பாலத்தின் வழியாக சென்ற போது, நாசரேத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் அருள் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான அருளுக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...