ஏரல் அருகே அம்மாள்தோப்பு கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி ஏரல்&முக்காணி மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
ஏரல் அருகே குடிநீர் கேட்டு
கிராம மக்கள் சாலை மறியல்
ஏரல், ஜூலை 13:
ஏரல் அருகே அம்மாள்தோப்பு பகுதியில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் பஸ் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஏரல் அருகே வாழவல்லான் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்மாள்தோப்பு, புது மனை, சத்தியாநகர், காம ராஜர் நகர் மற்றும் பூஞ் சோலை தெரு மக்களுக்கு அம்மாள்தோப்பில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வார மாக இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
அப்பகுதி மக்கள் குடி நீருக்காக நேற்று மாலை ஏரல்&முக்காணி மெயின்ரோட்டில் அம்மாள்தோப்பு பஸ் ஸ்டாப் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்குட்டி, அம்மாள்தோப்பு ஊர் தலைவர் ராமகிருஷ்ணன், துணை தலைவர் ராமச்சந்திரன், வாழவல்லான் பஞ்சாயத்து கவுன்சிலர் பெரிய சாமி, விடுதலை சிறுத்தை நகர துணை செயலாளர் முத்துராஜ் மற்றும் பெண்கள் உட்பட 200 பேர் காலிகுடங்களுடன் கலந்து கொண்டனர்.
ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் எஸ்.ஐ. மந்திரமூர்த்தி, சிறப்பு எஸ்.ஐ.க்கள் சுப்பிரமணியன், பண்டாரம், சுப்பையா மற்றும் வாழவல்லான் பஞ்சாயத்து தலைவர் துளசிஜெயபிர காஷ் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் நாளை(இன்று) மாலை குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மறியலில் ஈடுபட்ட மக்களிடம் ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக