வெள்ளி, 18 ஜூலை, 2014

ஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா துவக்க விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா
ஏரல், ஜூலை 18:
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத் தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை பூஜைகள் நடந்தது.
கோயில் முன்மண்டபத்தில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடி யேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர். இரவு சுவாமி இரவு 8 மணிக்கு கேடயச்சப்பரத்தில் அருணாசல சுவாமி திருக்கோலம் திருக்கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும், சிறப்பு நிகழ்ச்சியாக கருத்தப்பாண்டியன் கலையரங்கில் நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவை முன் னிட்டு தினசரி இரவு சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. முக்கிய விழாவான ஆடி அமாவாசை திருவிழா 26ம் தேதி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேர்மன் அருணாசல சுவாமி கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா துவக்க விழாவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டிய நாடார் கொடியேற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...