குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவில் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றுக்குள் குடிசை அமைத்து தங்கியிருந்தனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா
ஏரல், ஜூலை 16:
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஏரல் அருகே குரங்கணி யில் பிரசித்தி பெற்ற முத்து மாலை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திரு விழாக்களில் ஒன்றான ஆனித்திருவிழா கடந்த 1ம் தேதி கால்நாட்டுடன் துவங்கியது. அன்று முதல் பக்தர் கள் 15 நாள் நோன்பு இருந்தனர். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பகல் 1 மணிக்கு சிறப்பு பூஜை. இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடுதல், பக்தர்கள் மா விளக்கு பெட்டி எடுத்து வருதல், இரவு 1 மணிக்கு ஆனிப்பெருந்திருவிழா சிறப்பு பூஜை நடந்தது. அதி காலை 2 மணிக்கு நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதி வலம் வரு தலும், அதனை தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்குள் வாண வேடிக்கையும் நடந்தது.
விழாவில் பக்தர்கள் மக்கள் மாவிளக்கு எடுத்தும், பொங்கலிட்டும், மரத்தாலானா கை, கால்களை வாங்கி கோயிலில் கொடுத்து நேர்ச்சை செலுத்தியும் அம் மனை தரிசித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான ஆடு களையும் பலியிட்டனர். திருவிழாவுக்காக கார், வேன், மாட்டு வண்டிகள் மூலம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்றங்கரையோரம், அருகில் உள்ள தோட்டங்களில் தற்காலிக பந்தல் மற்றும் குடில்கள் அமைத்து தங்கினர். நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உட்பட முக்கிய ஊர்களில் இருந்து கோயி லுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடு களை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி ராமராஜன் தலை மையில் இன்ஸ்பெக்டர்கள் ஆழ்வார்திருநகரி கிங்ஸ்லி தேவஆனந்த், ஸ்ரீவை குண்டம் பிரான்சிஸ், பால் துரை, எஸ்.ஐ.க்கள் ஆழ்வார்திருநகரி ஜெயக்குமார், முத்துப்பட்டன், சாயர்புரம் பியூலா தங்கரத்தினம், ஏரல் மந்திரமூர்த்தி மற்றும் போலீசார் செய்திருந்தனர். பக்தர்களுக்கு குடிநீர், மின்விளக்கு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் சிவராம்பிரபு மற்றும் குரங்கணி ஊர்மக்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக