ஏரல், ஜூலை 10:
ஏரல் அருகே வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டது தொடர் பாக தொழிலாளி கைது செய்யப்பட்டார். பலரது மத்தியில் 200 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள் ளார்.
ஏரல் அருகே மாரமங்கலம் தேவர் தெருவை சேர்ந்தவர் ராமர் (68). இவர் அதே ஊரில் டீக்கடை மற்றும் பலசரக்கு கடை வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி இரவு ஊருக்கு தென்புறம் உள்ள வாய்க்கால் அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ராமர் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். டி.எஸ்.பி ராமராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், எஸ்.ஐ மந்திரமூர்த்தி, சிறப்பு எஸ்.ஐ.கள் சீனிவாசன், சுப்பிரமணியன், பண்டாரம், சுப்பையா, பூமிராஜ் மற்றும் தனிப்படை எஸ்.ஐ செல்வம், ஏட்டுகள் குமாரசாமி, பிரைம்குமார், மாடசாமி, விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை யாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், ராமரை கொலை செய்ததாக கூறி நேற்று காலை மாரமங்கலத்தை சேர்ந்த கர்ணன் (43) என்பவர் கொட்டரக் குறிச்சி வி.ஏ.ஓ. கோபாலிடம் சரணடைந்தார். போலீசார் கர்ணனை கைது செய்து விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்து போலீசில் கர்ணன் அளித்த வாக்குமூலம்:
நான் வாழை இலை அறுக்கும் தொழில் செய்கிறேன். எனது வீட் டுக்கு தேவையான பொருட் களை ராமர் கடையில் வாங்குவேன். இந்த வகையில் அவருக்கு ரூ.200 கொடுக்க வேண்டி இருந்தது. இதை அவர் அடிக்கடி என்னிடம் கேட்டு வந்தார். கடந்த 7ம் தேதி மாலை கடையில் நான் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தபோது நான்கு பேருக்கு மத்தியில் ராமர் கடனை திருப்பிச் செலுத்துமாறு கேட்டார்.
இது எனக்கு அவமானமாக இருந்தது. பின்னர் நான் மது குடித்து விட்டு சென்றபோது வாய்க் காலுக்கு வந்த ராமரை பார்த்து, பலரது மத்தியில் கடனை எப்படி கேட்கலாம் எனக் கூறி அவரிடம் தகராறு செய்து கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன் றேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்து விஏஓவிடம் சரணடைந்தேன்.இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கர்ணன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் மீது கடந்த 22&9&2008ல் மாரமங்கலத்தில் உறவினர் வீட்டுக்கு வந்த முத்தையாபுரம் நடராஜன் மனைவி கற்பகவல்லியை வெட்டியதாக ஏரல் போலீசில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதான தொழிலாளி வாக்குமூலம்
ஏரல் அருகே வியாபாரி கொலை
200 ரூபாய் கடனை திருப்பி
கேட்டதால் கொன்றேன்
கைதான கர்ணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக