வியாழன், 31 ஜூலை, 2014

ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோடு சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஏரல், ஜூலை 31:
ஏரலில் இருந்து முக்காணி செல்லும் மெயின்ரோடு மிக அகலமாகவும், நல்ல நிலையில் இருப்பதால் இந்த ரோட்டில் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த ரோட்டில் புதுமனை சேம்பரில் இருந்து வாழவல்லான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலகம் வரை இடைப்பட்ட ரோட்டில் இரண்டு இடங்களில் ரோட்டில் படுகுழி ஏற்பட்டுள்ளது.
நல்ல ரோட்டில் உள்ள இந்த படுகுழியால் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் நல்ல ரோடு என நினைத்து வேகமாக பைக்கீல் வருபவர்கள் இந்த எதிர்பாராத பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இவ்வழியாக இருசக்கர வாகனங்களில் ஏரல் பள்ளிக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நல்ல நிலையில் உள்ள தார்ரோடு மேலும் சேதாரமடைவதிற்குள் திடீரென ஏற்பட்டுள்ள இந்த படுகுழிகளையாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரல்&முக்காணி மெயின்ரோட்டில் வாழவல்லான் குடிநீர் வடிகால் வாரியம் அருகே ஏற்பட்டுள்ள திடீர் படுகுழியால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஏரல் & முக்காணி
பழுதான சாலையால் விபத்து அபாயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...