ஏரல் அருகே பயங்கரம் மளிகை கடைக்காரர் படுகொலை மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
மளிகை கடைக்காரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
மளிகை கடைக்காரர்தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராமர் (வயது 68). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை, டீக்கடையை ஒரே இடத்தில் நடத்தி வந்தார். அவருடைய மனைவி மல்லிகா.
இவர்களுக்கு மகேஷ் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகேஷ் தன்னுடைய தந்தையுடன் கடைகளை கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ராமர் வழக்கம்போல் கடைகளை பூட்டிவிட்டு, ஊருக்கு அருகே உள்ள வாய்க்கால் படித்துறையை நோக்கிச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
வெட்டிக் கொலைஇதற்கிடையே நள்ளிரவில், அப்பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வாய்க்கால் படித்துறை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு சாலையோரத்தில் ராமர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கவனித்தார். அவரது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார், உடனடியாக ஓடிச்சென்று மகேசிடம் தெரிவித்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்– இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
காரணம் என்ன?மோப்ப நாய் டெய்சி வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாய், மோப்பம் பிடித்துவிட்டு பக்கத்து ஊரான அகரம் வரை ஓடிச்சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மளிகை கடைக்காரர் ராமர் படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
மளிகை கடைக்காரர்தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராமர் (வயது 68). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை, டீக்கடையை ஒரே இடத்தில் நடத்தி வந்தார். அவருடைய மனைவி மல்லிகா.
இவர்களுக்கு மகேஷ் என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகேஷ் தன்னுடைய தந்தையுடன் கடைகளை கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ராமர் வழக்கம்போல் கடைகளை பூட்டிவிட்டு, ஊருக்கு அருகே உள்ள வாய்க்கால் படித்துறையை நோக்கிச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
வெட்டிக் கொலைஇதற்கிடையே நள்ளிரவில், அப்பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வாய்க்கால் படித்துறை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு சாலையோரத்தில் ராமர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கவனித்தார். அவரது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் இருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார், உடனடியாக ஓடிச்சென்று மகேசிடம் தெரிவித்தார். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன், ஏரல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்– இன்ஸ்பெக்டர் மந்திரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
காரணம் என்ன?மோப்ப நாய் டெய்சி வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பநாய், மோப்பம் பிடித்துவிட்டு பக்கத்து ஊரான அகரம் வரை ஓடிச்சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மளிகை கடைக்காரர் ராமர் படுகொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக