ஏரல், ஜூலை 30:
ஸ்ரீவை குண்டம் வடகால் மற்றும் தென்காலில் கருகும் பயிர் களை காப்பாற்ற மணி முத் தாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாது காப்பு பேரவை அமைப் பாளர் நயினார் குலசேகரன், தாமிரபரணி பாசன விவசாயிகள் ஒருங் கிணைப் பாளர் வியனரசு, வடகால் விவசாயிகள் ஒருங்கிணைப் பாளர் சம்பத், உழவர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தமிழ்மணி, நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் சந்திர மோகன், விவசாயிகள் சங்கம் தலைவர் லட்சமி புரம் முருகேசன், தெற்கு ஆத்தூர் பேரூராட்சி தலைவர் சதீஷ்குமார், சமூக ஆர்வலர் ஏரல் ஜெய பாலன் ஆகியோர் தமிழக முதல்வர், கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி பாசனம் ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் பகுதிகளில் பயிரிடப் பட்டுள்ள நெல், வாழை, வெற்றிலை பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன. கருகும் வாழை கள் காற்றில் சாய்கின்றன. வடகால் மற்றும் தென் காலில் திறந்துவிடப்பட்ட மிக குறைந்த அளவு தண்ணீர் கருகும் விவசாய பயிர்களுக்கு போய் சேர வில்லை. இதனால் விவ சாயிகள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் பயிர்கள் அடி யோடு அழிந்து விவசாயி களுக்கு கோடிகணக்கான ரூபாய் இழப்பு ஏற்படும்.
இந்நிலையில் 20 எம்.ஜி.டி திட்டத்தின் மூலம் தினசரி 20 மில்லியன் காலன் (9 கோடி லிட்டர்) தாமிரபரணி தண்ணீரை ஸ்ரீவைகுண்டம் அணையி லிருந்து எடுத்து தூத்துக்குடி பகுதியிலுள்ள 8 தொழிற் சாலைகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வருகிறது. 23&1&2006ல் அப்போதிருந்த கலெக்டர் சந்திரசேகரன் முன்னிலையில் 20 மில்லியன் காலன் தண்ணீர் விநியோகம் குறித்து நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கோடைகாலங்களில் தொழிற்சாலைகளுக்கு அடிப்படை அளவிலேயே தண்ணீர் வழங்கவேண்டும். நிலைப்பயிர்களுக்கு பாசனநீர் பற்றாக்குறை ஏற்படும் போது கலெக் டரின் அனுமதி பெற்ற பின்பே 20 எம்.ஜி.டி திட்டத்தில் தொழிற்சாலை களுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. எனவே ஸ்ரீவைகுண்டம் அணையி லிருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் எடுப் பதை உடன் நிறுத்தி கருகும் பயிர்களை காப்பாற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மணிமுத்தாறு அணையில் தற்போது 57.52 அடி தண்ணீர் உள்ளது. மணிமுத்தாறு அணைத்தண்ணீர் 80 அடிக்கு கீழே உள்ள தண்ணீர் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி பாசனத்திற்கு பாத்தியப் பட்டதாகும். இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாட்டிலும் மணிமுத்தாறு அணையை திறக்காமல் பொதுப்பணித் துறை அடைத்து வைத் துள்ளது. எனவே அணை யை திறந்து தேவையான அளவு தண்ணீரை ஸ்ரீவை வடகால், தென்காலில் கூடுதலாக தண்ணீர் கீழ் கோடி பாசன மடை வரைக்கும் சேர ஏற்பாடு செய்து அழிந்து கொண்டி ருக்கும் பயிர்களை காப் பாற்ற வேண்டும். அதே போல் மருதூர் மேலக்கால், கீழக்கால் பகுதி விவசாயி களுக்கும் தேவையான தண்ணீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம் வடகாலில் தண்ணீர் திறந்து 2 வாரங்களாகியும் குறைந்த தண்ணீரே செல்வதால் பேய்குளத்திற்கு வந்து சேரவில்லை. இதனால் குளம் மைதானம் போல காட்சியளிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக