புதன், 30 ஜூலை, 2014

தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்

சிறப்பு தொழுகையில் திரளானோர் பங்கேற்பு
நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியில் பாளை ரோட்டில் உள்ள ஈத்கா தோட்டத்தில் ரம்ஜான் பெருநாள் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில்
ரம்ஜான் பண்டிகை கோலாகலம்
தூத்துக்குடி. ஜூலை 30:
தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் நடை பெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. புத்தாடை அணிந்து தொழுகையில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை யும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண் டனர். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் மேலப்பாளையம் இமாம் ஷேக் உதுமான் தலைமை யில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் தலைமை இமாம் அப்துல்ஆலிம், ஜாமியா பள்ளிவாசல் தலைவர் ஷாகுல்ஹமீது உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ரோச்பூங்காவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நடந்த சிறப்பு தொழுகைக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் தலைமை வகித் தார். இதில் 200க்கும் மேற் பட்ட பெண்கள் உட் பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண் டனர்.
தூத்துக்குடி ஜாஹிர்உசேன் நகர் ஜூம்மா மசூதியில் இமாம் ரசூல் ரிஸ்தார் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. மேலும் தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வரும் திரேஸ்புரம், ரஹமத்துல்லாபுரம், ஜெயலாணி தெரு, புதுத்தெரு, முகம்மதுசாதலிபுரம், முத்தையாபுரம், முத்தம்மாள்காலணி, ரஹ்மத்நகர், மில்லர்புரம் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண் டனர்.
ஆறுமுகநேரி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காயல்பட்டினம் கிளை மற்றும் மஜிதுத் தவ்ஹீத் சார்பில் காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதேபோல் காயல்பட்டினம் இரட்டைக்குளத்து பள்ளி, புதுப் பள்ளி, தாயும்பள்ளி, ஆறாம்பள்ளி, கொடிமரத்து நயினா பள்ளி, அப்பா பள்ளி, காட்டு முகைதீன் பள்ளி உள்பட 24 பள்ளிவாசல்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தைக்காக்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. பெரு நாளை முன்னிட்டு புத் தாடை அணிந்து ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.
காயல்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை கடற்கரையில் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...