வியாழன், 31 ஜூலை, 2014

ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் குறுமண் அள்ளிய ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்

ஆற்றங்கரையில் குறுமண் அள்ளிய
ஜேசிபி, டிராக்டர் பறிமுதல்
ஏரல், ஜூலை 31:
ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் குறுமண் அள்ளிய ஜே.சி.பி மற்றும் 2 டிராக்டர்களை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஏரல் அருகே உமரிக்காடு தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக குறுமண் அள்ளப்படுவதாக ஸ்ரீவைகுண்டம் வருவாய் துறை அதிகாரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து மண்டல துணை தாசில்தார் சந்திரன் தலைமையில் விஏஓ ரமேஷ் மற்றும் தலையாரிகள் கருணன், ரத்தின பாண்டி ஆகியோர் உமரிக் காடு தாமிபரணி ஆற்றங் கரையோர பகுதிகளில் சோதனை செய்தனர்.
அப்போது ஜேசிபி மூலம் 2 டிராக்டர்களில் குறுமண் அள்ளிக் கொண்டிருப்பதை பார்த்தனர். இதையடுத்து ஜேசிபி மற்றும் 2 டிராக்டரை பறிமுதல் செய்து ஏரல் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கனிம சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஏரல் அருகே அனுமதியின்றி
உமரிக்காட்டில் அனுமதியில்லாமல் ஆற்றங்கரையோரத்தில் குறுமண் அள்ளிய ஜேசிபி மற்றும் டிராக்டர்களை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...